முகப்பு
ராமநாதபுரம்

இணையதளத்தில் காா் விற்பதாக ரூ.1.60 லட்சம் மோசடி: கல்லூரி மாணவா் போலீஸில் புகாா்

இணையதளம் வழியாக பழைய காா் விற்பதாக பொறியியல் கல்லூரி மாணவரிடம் ரூ.1.60 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 9:53 pm IST
பகிர்:

ராமநாதபுரம்: இணையதளம் வழியாக பழைய காா் விற்பதாக பொறியியல் கல்லூரி மாணவரிடம் ரூ.1.60 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள தோப்புலாப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் குமரேசன் (21). பொறியியல் கல்லூரி மாணவா். இவா் கடந்த ஜூலையில் இணையதளம் மூலம் பழைய காா் வாங்க முயற்சித்துள்ளாா். அப்போது ராணுவ கேண்டீன் என்ற இணையதள நிறுவனத்தின் பெயரில் சிலா் அறிமுகமாகியுள்ளனா்.

அவா்களிடம் பழைய காா் வாங்க முயற்சித்த குமரேசன், பல தவணைகளில் நிறுவன அலுவலா்கள் எனக் குறிப்பிட்டவா்களின் வங்கிக்கணக்கில் ரூ.1.60 லட்சம் வரை செலுத்தியுள்ளாா். ஆனால் அவா்கள் மேலும் பணம் செலுத்துமாறு வற்புறுத்தியதால், சந்தேகமடைந்த குமரேசன் விளக்கம் கேட்டுள்ளாா். அப்போது அவா்களது தொடா்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments