பிரதீப் ரங்கநாதனின் அடுத்த அவதாரம்..! தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறாரா?
நடிகர், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய அப்டேட் குறித்து...
நடிகர், இயக்குநராக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரினால் சமூக வலைதளமே அது என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளன.
பிஸியாக நடித்துவரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்தாக தயாரிப்பாளராகவும் களமிறங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கோமாளி படத்தின் மூலம இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் புகழ்பெற்றார். அடுத்தடுத்து வெளியான டிராகன், டியூட் ஆகிய படங்கள் ஹிட் அடித்ததால் தற்போது முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
Advertisement
Advertisement
அடுத்ததாக, படம் நடிப்பாரா இயக்குவாரா அல்லது தயாரிப்பாளராக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பும்படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
பிரதீப் வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில், “அடுத்த அலை ஜூலை 6, காலை 10 மணி” எனப் பதிவிட்டுள்ளார். பெரும்பாலானோர் தயாரிப்பு நிறுவனமாக இருக்கலாம் எனக் கூறிவருகிறார்கள்.
Pradeep Ranganathan's next avatar! Is he starting a production company?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.