ஆன்மிகம்

சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

தினமணி


சென்னை: திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா தரிசனம் அனைத்து சிவாலயங்களிலும் விமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நடராஜபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். 

ஆண்டுதோறும் திருவாதிரை நட்சத்திரம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவாலயங்களில் விடிய விடிய நடராஜப் பெருமானுக்கு விதவிதமான பழங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. 

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நடராஜ பெருமானுக்கு இரவு முழுவதும் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டனர். அபிஷேகங்கள் முடிவடைந்து இன்று காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், வீதி உலா உற்சவமும் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT