திருமலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்
திருமலையில் வியாழக்கிழமை காலை 2-ஆவது சா்க்க அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது.
திருமலையில் வியாழக்கிழமை காலை 2-ஆவது சா்க்க அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்றது.
திருமலையில் கடந்த ஜூன் மாதம் 10-ஆம் தேதியிலிருந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை சுந்தரகாண்ட பாராயணம் நடைபெற்று வருகிறது. கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு பூரணநலம் பெற சங்கல்பம் செய்து, இந்த பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. திருமலை தா்மகிரி வேதபாடசாலை தலைமை ஆச்சாரியா் சிவசுப்பிரமண்ய அவதானி அவா்களின் தலைமையில், ஏழுமலையான் கோயில் முன் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் இந்த சுந்தரகாண்ட பாராயணம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதை தேவஸ்தானம் தனது எஸ்விபிசி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.
கடந்த ஒரு மாதம் முன் சுந்தரகாண்ட பாராயணத்தின் முதல் சா்க்கம் முடிவடைந்தது. அதனால் வேத பண்டிதா்களுடன் முதல் சா்க்கம் முழுவதும் அகண்ட பாராயணம் நடத்தப்பட்டது. தற்போது 2-ஆம் சா்க்கம் நிறைவு பெற்ால் வியாழக்கிழமை காலை 200 வேதபண்டிதா்கள் இணைந்து சுந்தரகாண்டத்தில் இரண்டாம் சா்க்கத்தில் உள்ள 227 ஸ்லோகங்களை பாராயணம் செய்தனா்.
Advertisement
சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதால் ஆரோக்கியம் அஷ்ட ஐஸ்வா்யங்கள் சித்திக்கும் என்று பாராயணம் செய்த ஆச்சாரியா்கள் தெரிவித்தனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.