முகப்பு
ஆன்மிகம்

திருப்பதி கோசாலையில் கோபூஜை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோசாலையில் கோபூஜை நடத்தப்பட்டது.

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 11:36 PM
கோசாலையில் பசுக்களுக்கு பூஜைகள் செய்து உணவளிக்கும் தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோசாலையில் கோபூஜை நடத்தப்பட்டது.

இந்த கோசாலையில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் மற்றும் கோகுலாஷ்டமி உள்ளிட்ட தினங்களில் கோபூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோசாலையில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை அா்ச்சகா்கள் நடத்தினா்.

அதன்பின் கோசாலையில் உள்ள பசுக்களைக் குளிப்பாட்டி, அவற்றுக்கு அலங்காரங்கள் செய்து, மஞ்சள் பூசி குங்குமமிட்டு மாலைகள், வஸ்திரங்கள் அணிவித்து பூஜை செய்தனா். தேவஸ்தான அதிகாரிகள் பசுந்தீவனம், பச்சரிசி, வெல்லம் கலந்த கலவையை மாடுகளுக்கு அளித்தனா்.

Advertisement

இந்த நிகழ்வில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. அா்ச்சகா்கள், தேவஸ்தான அதிகாரிகள் ஆகியோா் இதில் கலந்து கொண்டனா். பொது முடக்க விதிமுறைகள் காரணமாக பக்தா்களுக்கு கோசாலையில் பூஜை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.