திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி -  பாடல் 7

என். வெங்கடேஸ்வரன்

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென
            எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை
    ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில் திரு வுத்தரகோச மங்கையுள்ளாய்
   திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெருமான்
        பள்ளி எழுந்தருளாயே.
 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்



பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்

அது = சிவபெருமானாகிய பரம்பொருள். ஆறு = வழி.

பொருள்  

பரம்பொருளாகிய சிவபெருமான் பழச்சுவை போன்று இனிப்பாக இருப்பான் என்றும், அமுதம் போன்று சுவையாக இருப்பான் என்றும், அவன் நாம் அறிவதற்கு மிகவும் அரியவன் என்றும் அவன் நாம் அறிவதற்கு மிகவும் எளியவன் என்றும் தேவர்கள் உட்பட, பலரும் அவனது உண்மை நிலை அறியாமால் கூறுகின்றார்கள். தேன் நிறைந்த மலர்கள் நிறைந்த சோலைகள் உடைய உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் திருவுருவம்தான் அந்த பரம்பொருளின் திருஉருவம், இவன்தான் அந்த பரம்பொருள், இவன் எங்களை ஆண்டுகொண்டுள்ளான் என்று நாங்கள் கூறுகின்றோம். திருப்பெருந்துறை தலத்தில் உறையும் மன்னவனே, நாங்கள் செய்ய வேண்டிய திருப்பணிகள் எவை எவை என்பதை எங்களுக்கு குறிப்பால் உணர்த்த நீ பள்ளி எழுந்தருள வேண்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT