செய்திகள்

கிருபானந்த வாரியாரின் 23-வது குரு பூஜை

தினமணி

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின்
23-வது ஆண்டு குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள வாரியார் சுவாமிகள் ஞானத்திருவளாகத்தில் திருநெறியத்தமிழ் வேள்வி, பூர்ணாஹுதி, மகாகலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, கிருபானந்த வாரியார் சுவாமிகள் புத்தகம், சொற்பொழிவு குறுந்தகடை பேரூர் ஆதீன இளைய பட்டம் மருதாசல அடிகளார், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் வெளியிட்டனர்.
பக்தர்களுக்கு அன்ன தானம் அளிக்கப்பட்டது. குரு பூஜையில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வம்சாவழியினர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஞானத் திருவளாக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT