செய்திகள்

மாமல்லபுரம் மல்லீகேஸ்வரர் கோயிலில் 251 பால்குட ஊர்வலம்

DIN

மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் கோயிலுக்கு திங்கள்கிழமை 251 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
இக்கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா புதன்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
பால்குட ஊர்வலம் மாமல்லபுரம் நுழைவு வாயிலில் உள்ள கருகாத்தம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, கங்கைகொண்டான் மண்டபம், பேருந்து நிலையம், அர்சுனன் தபசு, மாடவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னர் மல்லிகேஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT