செய்திகள்

மேனாம்பேடு: ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில் சங்காபிஷேக நிகழ்ச்சி

தினமணி

அம்பத்தூர்: சென்னையை அடுத்த அம்பத்தூரில் மேனாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் நாளை பைரவர் மகா அஷ்டமி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமனோன்மணி சமேத ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு 10.12.2017 ஞாயிறு மாலை சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

மறுநாள், 11.12.2017 திங்கட்கிழமை, கார்த்திகை மாதத்தின் 4ம் சோமவார தினத்தை முன்னிட்டு ஸ்ரீஅன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே பொருளாதாரம் உயர்வதை அடுத்த சில நாட்களில் உணரலாம் என்று சொல்லுவதன் மூலம் இவரது மகத்துவம் விளங்கும்.

கார்த்திகை மாத அஷ்டமி தினத்தில்தான் பைரவர் உதித்தார் என்பதால் இது மகா அஷ்டமியாகக் கருதப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த மகா அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்கி அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்.

முகவரி :
ஸ்ரீஅன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயம்
மேனாம்பேடு, அம்பத்தூர்,
சென்னை - 53. (மேனாம்பேடு பேருந்து நிலையம் மிக அருகே)
தொடர்புக்கு : 9003 086 204

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT