திருப்பதி ஏழுமலையானை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் புதன்கிழமை வழிபட்டார்.
திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை வழிபட்ட பின்னர் தனபால் செவ்வாய்க்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசனத்துக்கான ஏற்பாடு செய்தனர்.
இரவு திருமலையில் தங்கிய பேரவைத் தலைவர் புதன்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். வழிபாடு முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதத்தை வழங்கினர். பின்னர் அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார்.