செய்திகள்

திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

DIN

திருவண்ணாமலையில் நேற்று விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத தலங்களுள் ஒன்றாகும். இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். 

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதால் வழக்கத்தை விடப் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. 

கட்டண தரிசன வழி மற்றும் பொது தரிசன வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT