செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி இன்று மாலை அன்னையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு

தினமணி


திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகப்பெருமான் வேல்வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. 

கந்தசஷ்டி விழா கடந்த 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனையும் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
மேலும், தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிக்குள் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான அன்னையிடம் இருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT