செய்திகள்

மகர ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் இனி எல்லாம் வெற்றி தாங்க! 

தினமணி

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் மகர ராசிக்குத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2 பாதங்கள்)

மகர ராசி நேயர்களுக்கும் ராசியதிபதி 12-ல் அமர்ந்துள்ளார். 2-ம் இடத்திற்கு அவருடைய 3-ம் பார்வை கிடைக்கிறது. ஆகத் தனஸ்தானத்திற்கு சனியின் பார்வை இருப்பதால் பணப்புழக்கம் சற்று மந்தமாகவே இருக்கும். பணப்புழக்கம் குறைவதனால் அவர் பணம் செலவழிக்கவும் சிறிது சிரமப்படுவார். ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால்தான் இத்தகைய சிரமத்திலிருந்து வெளிவர முடியும். 

2-ம் இடம் தனஸ்தானம். தனஸ்தானாதிபதி 12-ல் இருப்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதாவது வீண்செலவுகள் அதிகரிக்கும். ஆகவே பணவரவை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.  

மூன்றாம் இடத்திற்கு குருபார்வை. குருவானவர் 11-ம் இடத்திலிருந்து பார்க்கிறார். ஆக சகோதரத்திடமிருந்து உதவி எதிர்பார்க்கலாம். மூன்று, மற்றும் 12-ம் வீடுகளுக்குடைய குரு 11-ல் இருப்பது பிரயாணங்களால் அனுகூலம். எந்த நோக்கத்திற்குச் சென்றார்களோ அந்த நோக்கத்திற்கு வெற்றி ஆகியன கிடைக்கும். சிலர் வெளிநாட்டுப் பயணங்களும் செல்வார்கள். அத்தகைய பயணத்தால் அவர்களுக்கு நன்மையே கிடைக்கும். 

படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் கிடைக்கும். கல்லூரிப் படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் எவ்விதத் தடையும் இருக்காது. அவர்கள் விரும்பிய கல்வியில் இடம் கிடைக்கும். வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்க விழைவோருக்கு அவர்கள் எண்ணம் நிறைவேறும். ஜனன ஜாதகத்தில் வாகன யோகம் உள்ளோருக்கு இந்தக் காலக் கட்டத்தில் வாகனம் வாங்க முடியும்.

5-ம் வீட்டிற்குக் குரு பார்வை கிடைப்பதால் புத்திரபாக்கியத்தை எதிர்பார்ப்போருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு ரேஸ், போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து பணம் கிடைக்கும். கலை உலகில் இருப்போரும் நல்ல புகழுடன் இருப்பார்கள். அவர்களுக்கு வரவேண்டிய பணமும் வந்து சேரும்.

தகப்பனாரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. அவருடனான உறவிலும் விரிசல் ஏற்படும். தர்மகாரியங்களிலும் உங்கள் பங்களிப்பு மறக்கப்படும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பெயர் அதில் கிடைக்காது.

வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு: 7-ம் இடம் வியாபாரத்தைக் குறிக்கிறது. அதற்கு லாபஸ்தானத்திலிருந்து குருவின் பார்வை கிடைப்பதால் வியாபாரத்திற்குக் குறைவில்லை. சரக்குகள் தேங்காது.

உத்தியோகஸ்தர்களுக்கு: அவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதோடு செய்த வேலைக்குக் கொடுக்கப்பட வேண்டிய அங்கீகாரமும் சரிவரக் கிடைக்காது. வேலை தேடுவோருக்கும் பெறு முயற்சிக்குப்பின் வேலைக் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று சனிபகவானை வணங்கி வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT