காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தின்போது அபிஷேக சேவைகள் ரத்து செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வரும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது.
இந்நாட்களில் கோயிலில் 3 கால அபிஷேகங்கள் மற்றும் மாலை வேளையில் நடைபெறும் அகண்ட தீபாரானை சேவை உள்ளிட்டவை தனிமையில் நடத்தப்படும். அதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
வரும் 24ஆம் தேதி 4 கால அபிஷேகங்களும் சிவனுக்கும், ஞானபிரசூனாம்பிகா அம்மனுக்கும் கோயில் சார்பில் நடத்தப்பட உள்ளது. அன்று இரவு நந்தி வாகனத்தில் உற்சவமூர்த்திகள் மாடவீதியில் வலம் வர உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.