செய்திகள்

24-இல் அனந்த சயன சுவர்ண மண்டபம் பிரதிஷ்டை

DIN


மதுராந்தகம் அருகே ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அனந்த சயன சுவர்ண மண்டபத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் உள்ளது சித்திரவாடி கிராமம். நயா திருப்பதி என்று அழைக்கப்படும் இங்குள்ள சிம்மகிரி மலையில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது.
இக்கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அனந்த சயன சுவர்ண மண்டபம் மற்றும் ஸ்ரீபுவனேஸ்வரி தாயார் சந்நிதி பிரதிஷ்டை நிகழ்ச்சி பிப்ரவரி 24-ஆம் தேதி காலை 9 முதல் 10.30 மணி வரை  நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவேணுகோபாலப் பெருமாள் அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT