செய்திகள்

திருப்பதி ரங்கம்பேட்டையில் மாடு விடும் திருவிழா

DIN


திருப்பதி அருகில் உள்ள ரங்கம்பேட்டையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடு விடும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
ரங்கம்பேட்டையில் மாட்டுப் பொங்கல் அன்று மாடு விடும் திருவிழா பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 
புதன்கிழமை காலை இத்திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. 
அவை அனைத்து வரிசையாக நிறுத்தப்பட்டு ஓடவிடப்பட்டன. இவற்றில் இலக்கை முதலில் எட்டிய மாட்டுக்கு பரிசு வழங்கப்பட்டது. காளைகள் வேகமாக செல்லும்போது இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் அந்த மாடுகளை தட்டி அவற்றின் வேகத்தை அதிகப்படுத்தினர். இத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT