செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு செயல் இணை அதிகாரி நியமனம்

DIN


திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் இணை அதிகாரியாக பசந்த்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரியை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவுக்கான செயல் இணை அதிகாரியான லட்சுமிகாந்தத்தின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றார். அப்பதவிக்கு விசாகப்பட்டினம் பெருநகர வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் பசந்த்குமாரை ஆந்திர அரசு நியமித்துள்ளது. 
அதேபோல், கடந்த 9 ஆண்டுகளாக தேவஸ்தானத்தின் திருமலை பிரிவு செயல் இணை அதிகாரியாக பணியாற்றி வந்த சீனிவாசராஜுவை ஆந்திர அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. புதிய அதிகாரி நியமிக்கப்படும் வரை வசந்த்குமார், திருமலை செயல் இணை அதிகாரி பொறுப்பையும் கவனிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பசந்த்குமாருக்கு சித்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளது. அவர் ஆந்திர ஆளுநர் நரசிம்மனின் செயலராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் தன் மகளுக்கு ரூ.16,100 மட்டுமே செலவு செய்து திருமணம் செய்து வைத்தார். அத்திருமணத்தில் ஆளுநர் தம்பதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 
ஆந்திர முதல்வரின் நம்பிக்கைக்குரிய அதிகாரி ஒருவர், தேவஸ்தான திருமலை பிரிவு செயல் இணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT