முகப்பு
செய்திகள்

மதுரவாயல் சிவ சுடலைமாட சுவாமிக்கு ஜூன் 14-ல் மகா கும்பாபிஷேகம்

சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி திருக்கோயிலில் 14.06.2019-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:08 AM
பகிர்:

சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி திருக்கோயிலில் 14.06.2019-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

சிவசுடலைமாட ஸ்வாமி தென்னக மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பல லட்சம் பேரின் குலதெய்வமாகும். சென்னையே சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் "கனல்" கண்ணன் மாடன் சாமிக்கு கோயில் கட்டியுள்ளார். 

அருள்மிகு ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி கோயில் கட்டி, பதினான்கு ஆண்டுகளாக பொதுமக்களால் வழிபட்டு வரப்படுகிறது. அக்கோயிலின் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் வருகிற 12.06.2019 முதல் தொடங்கி 14.06.2019 வரை நடைபெற இருக்கிறது. 

Advertisement

வைகாசி மாதம் 31-ம் தேதி 14.06.2019 வெள்ளிக்கிழமையும், வளர்பிறை துவாதசி திதியும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஆலய விமானம், இராஜ கோபுரம் மற்றும் மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

பக்த பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல ஸ்ரீசிவசுடலைமாட சுவாமி, ஸ்ரீஇசக்கியம்மன், ஸ்ரீகருப்பசாமி திருவருள் பெற்று வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை செய்து கொள்கிறோம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments