செய்திகள்

திருநாராயணப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம்

DIN

செங்கல்பட்டு அருகே உள்ள ஸ்ரீ ஆமோதவல்லி நாயகி சமேத ஸ்ரீ திருநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகாசம்ப்ரோக்ஷணம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. 

2003-ம் ஆண்டு நடந்த சம்ப்ரோஷணத்திற்குப் பிறகு தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த ஜனசபை என்ற அமைப்பின் மூலம் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 16 வருடங்கள் கழித்து திருநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நேற்று நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூன் 18-ல் ஆரம்பமானது. 

இத்திருத்தலத்திற்குச் செல்ல சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து வெண்பாக்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்தில் செல்லலாம். ஆட்டோ வசதிகளும் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT