செய்திகள்

பங்குனி உத்திர விழா

தினமணி


மதுராந்தகத்தை அடுத்த பரமேஸ்வரி மங்கலம் கனகாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 22-இல் நடைபெறவுள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர். 
செய்யூர் வட்டம், பரமேஸ்வரி மங்கலம் கிராமத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது கனகாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோயில். இந்த கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7மணிக்கு நடைபெறும். விழாவில், பஞ்சமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 
மூலவர் அபிஷேகம், பஞ்சமூர்த்தி உற்சவ சிலைகளுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கே.கே.சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்துவருகின்றனர்.       
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT