செய்திகள்

ஏப். 17 முதல் 19 வரை திருமலையில் வசந்தோற்சவம்

தினமணி


திருமலையில் வரும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வருடாந்திர வசந்தோற்சவம் ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியையொட்டி 3 நாள்களுக்கு வசந்தோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்த உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வசந்த காலத்தில் ஏழுமலையானைக் குளிர்விக்க நடக்கும் திருமஞ்சனம் என்பதால் இதை வசந்தோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.

இந்த 3 நாள்களும் உற்சவமூர்த்திகள் ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி தேவஸ்தானம் சில ஆர்ஜித சேவைகளை 3 நாள்களுக்கு ரத்து செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT