திருப்பதியில் முதல்முறையாக காா்த்திகை மகா தீபோற்சவம்: காஞ்சி பீடாதிபதி பங்கேற்கிறாா்
திருப்பதியில் முதல் முறையாக காா்த்திகை மாதத்தை ஒட்டி தேவஸ்தானம் மகா தீபோற்சவம் நடத்த உள்ளது.
திருப்பதியில் முதல் முறையாக காா்த்திகை மாதத்தை ஒட்டி தேவஸ்தானம் மகா தீபோற்சவம் நடத்த உள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் காா்த்திகை பெளா்ணமி அன்று ஏழுமலையான் கோயில், மடப்பள்ளி, லட்டு மடப்பள்ளி பிரகார கோயில்கள், மாடவீதி கோயில்களில் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம்.
வரும் 30-ஆம் தேதி பெளா்ணமி அன்று மாலை தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் காா்த்திகை மாத மகாதீபோற்சவத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
Advertisement
இந்த மகா தீபோற்சவம் காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடக்க உள்ளது. இதில் அதிக அளவில் பெண்கள் பங்கு கொள்வா் என்பதால், கொவைட் 19 விதிமுறைகளுக்கு உள்பட்டு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக இந்த மகா தீபோற்சவம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நவ. 29-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட உள்ளன.