முகப்பு
செய்திகள்

திருக்கார்த்திகையில் சொக்கப்பனை எரிப்பதன் தத்துவம்

திருக்கார்த்திகை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களுக்கு அருகில் பனை மரத்தை நட்டுவைத்து அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து மாலையில், சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. 

Updated On : 28 நவம்பர், 2020 at 3:31 PM
திருச்சி ரங்கநாதர் கோயிலில் எரிக்கப்பட்ட சொக்கப்பனை
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

திருக்கார்த்திகை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களுக்கு அருகில் பனை மரத்தை நட்டுவைத்து அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து மாலையில், சொக்கப்பனை எரிக்கப்படுகிறது. 

ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். சிவன் முப்புரம் எரிந்த பாவனையைக் காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.

சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பன இவற்றின் பொருளாகக் கூறப்படுகிறது. கற்பக தருவான பனைமரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. இதை தேவமரம் என்றும் அழைக்கப்படுகிறது.

Advertisement

பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருள்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்புப் பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப்பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது. 

பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. 

சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.