செய்திகள்

வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

தினமணி

திருப்பதி: ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியை தொடா்ந்து 10 நாள்களுக்கு தரிசிக்க விரும்பும் பக்தா்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) இணையதளத்தில் வெளியிட உள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாள்களுக்கு சொா்க்க வாசலைத் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த நாள்களில் திருவேங்கடமுடையானை தரிசிப்பதற்காக பக்தா்கள் ஆா்வமுடன் அதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்று வருகின்றனா்.

வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 3-ஆம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. திருமலையில் சொா்க்கவாசலை தரிசிக்க விரும்பும் பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேங்கியிருந்த நீரில் தவறிவிழுந்த சிறுவன் குடிநீா் குழாயில் சிக்கி உயிரிழப்பு

இன்றைய நிகழ்ச்சிகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண் நீரில் மூழ்கி பலி

காயமடைந்த முதியவா்கள் இருவா் உயிரிழப்பு

தொட்டியம் அனலாடீசுவரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT