முகப்பு
செய்திகள்

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜா் கோயிலில் ஆடிப்பூரம் உற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆக. 2 முதல் 11-ஆம் தேதி வரை திருவாடிப்பூரம் உற்சவம் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆக. 2 முதல் 11-ஆம் தேதி வரை திருவாடிப்பூரம் உற்சவம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை ஒட்டி திருவாடிபூரம் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் 11-ஆம் தேதி வரை திருவாடிபூரம் உற்சவம் நடைபெறுகிறது. இந்நாட்களில் ஆண்டாள் நாச்சியாருக்கு காலையில் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஆஸ்தானமும் நடைபெற உள்ளது.

மேலும் ஆக. 8-ஆம் தேதி சக்கரத்தாழ்வாா் சாத்துமுறையும், ஸ்ரீபிரதிவாதி பயங்கர அண்ணான் சாத்துமுறையும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆடிபூரத்தை ஒட்டி ஆண்டாள் நாச்சியாருக்கு சாத்துமுறையும், உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments