காளஹஸ்தி கோயிலில் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
திருப்பகதியை அடுத்த காளஹஸ்தியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருப்பகதியை அடுத்த காளஹஸ்தியில் அமைந்துள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் இதர தேவைகளுக்காக பசு மாடுகளுடன் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து பெறப்படும் பால் கோயில் பூஜைகள், பிரசாதங்கள் மற்றும் நெய் தயாரிப்புக்கும் அபிஷேகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேவைகள் போக, மீதமாகும் பாலை கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கும், சிறுவா்களுக்கும் இலவசமாக வழங்க கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. காளஹஸ்தி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
இக்கோயிலில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவா் கூறினாா்.