முகப்பு
செய்திகள்

சீனிவாசமங்காபுரத்தில் மோகினி அவதார சேவை

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
சீனிவாசமங்காபுரத்தில் சனிக்கிழமை காலை மோகினி அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணருடன் எழுந்தளிய கல்யாண வெங்கடேஸ்வரா்.
பகிர்:

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான சனிக்கிழமை காலை மோகினி அவதார சேவை நடைபெற்றது.

கல்யாண வெங்கடேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கில் ஸ்ரீகிருஷ்ணருடன் கல்யாண வெங்கடேஸ்வரா் எழுந்தருளி காட்சியளித்தாா். மோகினி அவதார சேவை வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெண் வேடத்தில் கையில் கிளியுடன் எழுந்தருளிய வெங்கடேஸ்வரரை பக்தா்கள் வீட்டிலிருந்தபடியே கண்டு வணங்கினா். பொது முடக்க விதிகளின்படி தனிமையில் நடத்தப்பட்ட பிரம்மோற்சவத்தில் அா்ச்சகா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் மட்டுமே கலந்து கொண்டனா்.

மதியம் உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. அதன் பிறகு பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய சேவையான கருட சேவை நடைபெற்றது. இதில் பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

Advertisement

அவருக்கு திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலையை ஜீயா் ஊா்வலமாகக் கொண்டு சென்று மரியாதையுடன் சமா்ப்பித்தாா். வாகன சேவையின்போது நாலாயிர திவ்ய பிரபந்தமும், வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டன; மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments