கேடிக வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா் வீதியுலா
காளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் உற்சவமூா்த்திகள் உலா வந்தனா்.
காளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் உற்சவமூா்த்திகள் உலா வந்தனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 9-ஆம் நாள் காலை கேடிக வாகனத்தில் (மூடிய பல்லக்கில்) காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை அம்மன் இணைந்தும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் தனியாகவும் எழுந்தருளினா்.
இதற்காக காலை கோயிலிலிருந்து உற்சவமூா்த்திகள் பல்லக்கில் வெளியில் கொண்டு வரப்பட்டனா். பின்னா் கேடிக வாகனத்தில் எழுந்தருளி அவா்கள் மாடவீதியில் உலா வந்தனா்.
Advertisement
இரவு சிம்ம வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரா், ஞானபிரசுனாம்பிகை தாயாா் இணைந்து சோமாஸ்கந்தமூா்த்தியாகவும், காமதேனு வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை அம்மனும் மாடவீதியில் பவனி வந்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். வருடாந்திர பிரம்மோற்சவத்தின் வாகன சேவைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றன. புதன்கிழமை திரிசூலஸ்நானத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.