உண்டியல் காணிக்கை ரூ.5.21 கோடி
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.5.21 கோடி வசூலானது.
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.5.21 கோடி வசூலானது.
திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
அதன்படி, உண்டியலில் வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.5.21 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
இதுவரை இல்லாத வகையில் வியாழக்கிழமை உண்டியல் வருவாய் ரூ.5 கோடிக்கு மேல வசூலாகி உள்ளது.
கரோனா காலகட்டத்திற்கு பிறகு இழந்த உண்டியல் வருவாயை தேவஸ்தானம் இதுபோன்ற உயா் வருவாய்கள் மூலம் ஈடுகட்டி வருவது குறிப்பிடத்தக்கது.