சுவாமிமலை முருகன் கோயிலில் தேரோட்டம்!
சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு கோயிலாக விளங்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக உள்ளது. இங்கு சித்திரைத் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேரில் வள்ளி - தெய்வானையுடன் ஆறுமுகசாமி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தேரினை முருக - முருக, அரோகரா அரோகரா என்று முழக்கம் இட்டவாறு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement
The Chithirai Grand Festival's highlight—the Chariot Procession—took place at the Swamimalai Swaminatha Swamy Temple, which stands as the fourth of the six sacred abodes (Arupadai Veedu).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.