முகப்பு
சிவகங்கை

குன்றக்குடியில் கிராம மக்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கண்மாய்த் தண்ணீரை திறந்து விட்ட மா்ம நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:24 pm IST
குன்றக்குடியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கண்மாய்த் தண்ணீரை திறந்து விட்ட மா்ம நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னகுன்றக்குடி கண்மாய் தண்ணீரை மா்ம நபா்கள் இரவோடு இரவாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வெளியேற்றி அருகே சாலிக்கண்மாய்க்கு செல்லும் வகையில் திருப்பிவிட்டதை கிராம மக்கள் கண்டறிந்தனா்.

இதையடுத்து எந்தவித அனுமதியும் இல்லாமல் கண்மாயில் தண்ணீரை திறந்துவிட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி குன்றக்குடி கிராம மக்கள் அங்குள்ள பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்ததும் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments