சென்னை மாநகராட்சி விநாயகபுரம், எம்.எம்.டி.ஏ. காலனி, அண்ணா நகர், கல்கி நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல வீடுகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை. இதனால், வீட்டின் முன் தெருக்களில் வாகனங்கள் நிறுத்தும் நிலை உள்ளது. இந்த வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. போலீஸார் இந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.