ஆராய்ச்சிமணி

மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

DIN

சென்னை பெருநகராட்சி 105-ஆவது வட்டம், எம்.எம்.டி.ஏ. காலனி தபால் நிலையம் எதிரே உள்ள பாண்டியன் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்புப் பெட்டி மூடாமல் திறந்த நிலையில் மின்சார கம்பி வெளியில் நீட்டியபடி உள்ளது.
இந்த வழியே வரும் வயது முதிர்ந்தவர்கள் மின் கம்பிகளால் இரவு நேரங்களில் தடுக்கி விழுகின்றனர். மேலும், சிறுவர்கள் தெரியாமல் மின் கம்பிகளை தொட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மின் வாரியத்துக்கும் பெருநகராட்சி புகார் பிரிவுக்கும் பலமுறை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இந்த மின்சார இணைப்புப் பெட்டியை மூட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT