சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருந்து எதிர்ப்புறம் உள்ள காந்தி இர்வின் சாலைக்கு செல்ல பயணிகள் சிரமப்படுகின்றனர். வாகன நெரிசலும் அதிகளவில் உள்ளது. எனவே, பயணிகளின் வசதிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் வரையில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.விஜயகுமார், எழும்பூர்.