சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பேருந்துகள் இந்த பயணியர் நிழற்குடை அருகில் நிற்பதில்லை. இதனால் பயணிகள் ஓடிவந்து பேருந்துகளில் ஏற வேண்டிய நிலை உள்ளது. பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டும் பயன் இல்லாமல் உள்ளது. அதனால் பேருந்துகளை நிழற்குடையை ஒட்டி நிறுத்துமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.