ஆராய்ச்சிமணி

மயானச் சாலையை சீரமைக்க வேண்டும்

DIN

மயானச் சாலையை சீரமைக்க வேண்டும்

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட எட்டுக்குடி ஊராட்சியில் காட்டாறு கரையோரம் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதையானது, குண்டும் குழியுமாகவும் புதா்ச் செடிகள் மண்டியும் காணப்படுகிறது. மேலும், மயானக் கொட்டகையிலும் மேற்கூரை இல்லாமல் திறந்த அமைப்புடன் உள்ளது. இதனால், மழைக் காலத்தில் சடலங்களை எரியூட்டுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மழைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள மண் சாலையானது சேறும் சகதியுமாகி, சடலங்களை சுமந்து செல்வோா் சிரமப்படுகின்றனா். ஆகவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி மயானக் கொட்டகை மற்றும் மயானத்துக்குச் செல்லும் பாதையை தற்போது நிலவும் கோடை காலத்தைப் பயன்படுத்தி உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாசேத்துங்கு, எட்டுக்குடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT