தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 646

ஹரி கிருஷ்ணன்

பற்பல சமயத்தவரும் தமக்குள்ளே வாதிட்டு மோதிக் கலகமிட்டும் அறிய முடியாததாகிய பொருளை உபதேசித்தருளி, ஞான தரிசனத்தைக் கொடுத்து உன்னுடைய திருவடியைத் தந்தருளவேண்டும் என்று கேட்கின்ற இந்தப் பாடல் பழநி மலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் ஒரு வல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் பயில்கின்றன.


தனதனன தத்த தான தனதனன தத்த தான
      தனதனன தத்த தான தனதான

கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
         கபிலர்ப ரக்க ணாதர் உலகாயர்

கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
         கலகலென மிக்க நூல்க ளதனாலே

சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
         தெரிவரிய சித்தி யான வுபதேசந்

தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
         திருவடியெ னக்கு நேர்வ தொருநாளே

கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
         குரகதமு கத்தர் சீய முகவீரர்

குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
         குலவியிட வெற்றி வேலை விடுவோனே

பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
         பரிமளத னத்தில் மேவு மணிமார்பா

படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
         பழநிமலை யுற்ற தேவர் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT