கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி : -பெருமழை விஜய்

கவிதைமணி
கல்லறைதான் வாழ்வின் கடைசிப் புகலிடமாம்கடைசிப் புகலிடத்தில் காத்திருக்கும்  பூ நான்!காத்திருக்கும் பூ நான்  கடவுளிடம் சென்றதில்லை!கடவுளிடம் சென்றதில்லை கண்ணியத்திற்குக் குறைவுமில்லை!கண்ணியத்திற்குக் குறைவுமில்லை கடவுள்தானே இறந்தபின்னால்!கடவுள்தானே இறந்தவர்கள் கடனறிந்து வாழ்ந்திருந்தால்!கடனறிந்து வாழ்ந்தவர்கள் கவினுலகில் மறைவதில்லை!கவினுலகில் மறையாமல் காவியமாய் நிலைத்திடுவர்!காவியமாய் நிலைப்பவர்கள் நெஞ்சினிலே நானிருப்பேன்!நெஞ்சினிலே அமர்கையிலே கண்களிலே நீர் கசியும்!நீர் கசியும் கண்களுடன் நின்றிடுவேன் பிரமித்தேபிரமித்து நான் நின்றால்  பிணத்திற்குப் பெருமையுண்டு!பிணத்தின் பெருமையினை பின்வரும் உறவுணர்த்தும்!உறவுகள் கூட்டமாய் ஒன்றாய் சேர்ந்து வருவர்!ஒன்றாய் சேர்ந்து வந்தால் உதிர்ந்தவர் உண்மையானவர்!உண்மையானவர் உதிர்கையில் உதிர்த்திடுவேன் கண்ணீரைஉதிர்க்கும் கண்ணீருக்கு உள்ளுண்டு இரண்டு காரணம்!இரண்டு காரணத்தில் ஒன்று அவர் இன்னும் வாழ்ந்திருக்கலாம்!வாழ்ந்திருக்க வேண்டியவர் வந்திட்டார் ஆனாலும் பலர் இங்குபலர் இங்கு வீணே வாழ்கின்றார் வெந்திடுது நம்முள்ளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT