நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3

செ.குளோரியான்

பாடல் 3

எவைகொல் அணுகப் பெறுநாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்,
நவைஇல் திருநாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகல் ஆவது ஓர்நாள் அறியேனே.

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருநாவாயைச் சென்றடையும் நாள் என்றைக்கோ என்று எப்போதும் ஏங்குகிறேன், வேறு எதையும் என் மனம் கருதுவதில்லை, அப்பெருமானைமட்டுமே நினைக்கிறது, கண்ணீர் விட்டு வருந்துகிறேன். குற்றமில்லாத திருநாரணன் எழுந்தருளியிருக்கும் அந்தத் திருநாவாயிலே, அப்பெருமானின் சபையில் நான் புகும் நாள் என்றைக்கோ? எனக்குத் தெரியவில்லையே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT