பாடல் 8
அருளாது ஒழிவாய், அருள்செய்து அடியேனைப்
பொருள்ஆக்கி உன் பொன்னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே.
அழகிய திருநாவாயிலே எழுந்தருளியிருக்கும் என் தெய்வமே, எம்பெருமானே, நீ எனக்கு அருள்செய்யாமலிருந்தாலும் சரி, அருள்செய்து என்னை ஒரு பொருட்டாக்கி உன்னுடைய அழகிய திருவடிகளின்கீழ் புகவைத்தாலும் சரி, எந்த மயக்கமும் இல்லாமல் உன்னை நான் நெஞ்சத்தில் இருத்தவேண்டும், அந்தத் தெளிவை எனக்குத் தருவாய்.