நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் 11

அவா அறச் சூழ் அரியை, அயனை, அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.

பக்தர்களின் ஆசை தீரும்படி அவர்களைச் சூழ்கின்ற திருமாலை, பிரமனுக்குள்ளும் சிவனுக்குள்ளும் இருக்கும் பெருமானைப் போற்றி, உலக ஆசைகளைத் தீர்த்து வீடு பேறு பெற்றார் குருகூர்ச் சடகோபன், அவர் எம்பெருமான்மீது கொண்ட ஆசையாலே சொன்ன அந்தாதிப் பாடல்கள் ஆயிரம், அவற்றுள் முற்றிய ஆசையாலே பிறந்த இந்தப் பத்து அந்தாதிப் பாடல்களையும் அறிந்தவர்கள் உயர்ந்த பிறவிகளாவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT