நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 6

எனக்கு அன்பானவனே

செ.குளோரியான்

பாடல் 6

எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், இனி உண்டொழிவாய்,
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண், செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா, என் அன்பேயோ.

புனத்திலே பூத்த காயாம்பூவைப்போன்ற நிறத்தைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்கள், செங்கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, உனக்கு ஏற்ற அழகைக்கொண்டவள், பூவிலே எழுந்தருளியிருக்கும் திருமகளின் அன்பனே, எனக்கு அன்பானவனே, என்னுடைய ஆரா அமுதமான நீ எனக்குள் பெரும் விருப்பத்தை உண்டாக்கி என்னுடைய ஆவியை, இனிய உயிரை உண்டாய், இனியும் அவ்வாறே உண்பாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT