நூல் அரங்கம்

பாரதி உள்ளம் - வி.ச.வாசுதேவன்

DIN

பாரதி உள்ளம் - வி.ச.வாசுதேவன்; பக். 144; ரூ.135; சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53-ஆவது தெரு, அசோக்நகர், சென்னை-83.
 தமிழின் மகாகவியான பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளானாலும் அவரது படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவரது கவித்துவம் நிரம்பிய தூய உள்ளம்.
 அவருடைய உள்ளத்தில் அன்பு, கடவுள் பக்தி, நகைச்சுவை உணர்வு, தாய்ப்பாசம் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியிருந்தன. அவற்றைப் பற்றி எழுதியுள்ளார் முதுபெரும் பாரதி அன்பரான வி.ச. வாசுதேவன்.
 பாரதியாரைப் பற்றிய பல்வேறு தகவல்கள், அவரது குரு பரம்பரை, அவரது பழக்க வழக்கங்கள், நண்பர்கள் என்று பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல். இது தவிர மகாத்மா காந்தியுடன் அவருக்கு இருந்த பக்தி, வள்ளலார், கோதை, திருவள்ளுவர், ஒüவையார், ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் படைப்புகளோடு பாரதியின் படைப்புகளை ஒப்பிட்டு பார்க்கும் கட்டுரைகள், இளம் வயதிலேயே பாரதிக்கு இருந்த எழுத்து ஆர்வம், ஆகியவற்றைப் பற்றியும் நூலாசிரியர் சுவைபட எழுதியுள்ளார்.
 விவரம் தெரியாத வயதிலேயே தாயை இழந்த பாரதிக்கு இருந்த தாய்ப்பாசமே தாய்த்திருநாட்டைப் பற்றி பாட வைத்தது, வடநாட்டு பிராமணர்களைப் பார்த்து பாரதி முறுக்கு மீசை வைத்துக் கொண்டது போன்ற அரிய தகவல்கள் இந்த நூலில் காணப்படுகின்றன.
 இந்த நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பாரதி அன்பர்களுக்கு எக்காலத்திலும் உற்சாகமளிக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT