நூல் அரங்கம்

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

DIN

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி; தமிழில்: சசிகலா பாபு; பக்.200; ரூ.200; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி; )04259 - 226012.
 உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன.
 இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. அதேபோன்று சித்தார்த்தன் புத்தராக புதுப்பிறவி எடுத்த வரலாறும் வேறு கோணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 உலகின் புகழ்பெற்ற புராணப் பாத்திரங்களான ஹோரஸ், ரோமுலஸ், ஹெராகிள்ஸ், ரெமஸ் உள்ளிட்டோரின் கதைகளும் வித்தியாசமாகவும், அதேநேரத்தில் சுவாரஸ்யமாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.
 அதுமட்டுமன்றி, நாம் பெரிதும் அறிந்திராத பெர்சியாவின் (தற்போதைய ஈரான்) மூன்று இளவரசர்களான ருஸ்டம், சால், சவுரப், செல்டிக் நாயகன் குக்கோலன், டிராகனாக உருமாறும் சீனச் சிறுவன் வென் பெங் உள்ளிட்டோரது கதைகள் கவனம் ஈர்க்கின்றன.
 வழக்கமான கோணத்தில் எழுதப்படும் புராணங்களின் கதை சொல்லும் மரபில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ள நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT