தினம் ஒரு தேவாரம்

135. மன்னியூர் இறை  - பாடல் 8

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 8:

    தூர்த்தனைச் செற்ற
    தீர்த்தன் அன்னியூர்
    ஆத்தமா அடைந்து
    ஏத்தி வாழ்மினே

விளக்கம்:

தீர்த்தன்=தூய்மை செய்பவன்; ஆத்தமா=அன்புடன்; ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. நெருங்கிய நண்பனை ஆப்தன் என்று சொல்வதுண்டு. தூர்த்தன்=காமி, பெண்பித்து கொண்டு அலைபவன்;

பொழிப்புரை:

பெண்பித்து கொண்டவனாக திகழ்ந்த அரக்கன் இராவணின் வலிமையைக் குன்றச் செய்து  அவனை வெற்றி கொண்ட பெருமான், அன்னியூர் தலத்தில் உறையும் பெருமான், தனது அடியார்களின் மலங்களைத் தீர்க்கும் புனிதனாக விளங்குகின்றான். அவனை உங்களது நெருங்கிய நண்பனாக கருதி அவன் பால் அன்பு வைத்து, அவனை புகழ்ந்து வாழ்த்துவீராக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT