தினம் ஒரு தேவாரம்

134. மன்னியூர் இறை - பாடல் 3

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 3:

    நீதி பேணுவீர்
    ஆதி அன்னியூர்
    சோதி நாமமே
    ஓதி உய்ம்மினே

விளக்கம்:

நீதி=நியதி, வழிபாட்டு முறைகள்; நீதி பேணுதல்=வழிபாட்டு முறைகளில் ஒழுகுதல்; பெருமானைக் கண்டு தொழுத பின்னர் அவனது திருநாமங்களை சொல்வது தானே முறை.  

பொழிப்புரை:

வேதங்களிலும் ஆகம நூல்களிலும் சொல்லிய வண்ணம் முறையாக பெருமானைத் தொழும் அன்பர்களே, நீவிர் அனைவரும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருப்பவனும் சுயமாக ஒளி வீசுபவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களை ஓதி உய்வினை அடைவீர்களாக.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT