முகப்பு
விளையாட்டு

இறுதிச்சுற்றில் பயஸ்-பூபதி: பரபரப்பான ஆட்டத்தில் குரேஷிய ஜோடியை வென்றது

 சென்னை, ஜன.8: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹேசி-அமெரிக்காவின் டேவிட் மார்ட்டின் ஜோடியை எதிர்கொள்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

 சென்னை, ஜன.8: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹேசி-அமெரிக்காவின் டேவிட் மார்ட்டின் ஜோடியை எதிர்கொள்கிறது.

 ÷சனிக்கிழமை நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி 6-1, 6-7, 10-5 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் மரின் சிலிச்-இவான் டோடிக் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 ÷முன்னதாக மாலையில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தின் முதல் செட்டை இந்திய ஜோடி 6-1 என்ற கணக்கில் எளிதாக வென்றது. பின்னர் நடந்த பரபரப்பான இரண்டாவது செட்டை இந்திய ஜோடி 6-7 என்ற கணக்கில் குரேஷிய ஜோடியிடம் இழந்தது. இதையடுத்து டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது.

 டை பிரேக்கர் வாய்ப்பில் முதல் 8 கேம்களில் இரு ஜோடிகளும் 4-4 என்ற சமநிலைப் பெறவே பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பரபரப்போடு காணப்பட்டனர். ஆனால் இந்திய ஜோடி சிறப்பாக ஆடி அடுத்த 4 கேம்களை தங்கள் வசமாக்கி, இறுதியில் 10-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய ஜோடி வெற்றிபெற்றதும் மைதானமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

 மற்றோர் இரட்டையர் அரை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் ராபின் ஹேசி-அமெரிக்காவின் டேவிட் மார்ட்டின் ஜோடி 2-6, 6-3, 10-7 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சைமன் பொலேலி-செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →