முகப்பு
விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டன்

2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்

Updated On : 1 ஜனவரி 2013, 1:14 am IST
பகிர்:

2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய  அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டி வரும் ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 17ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதால் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இப்போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

அணி வீராங்கனைகள் விவரம்:

மிதாலி ராஜ் (கே), ஹர்மன்

பிரீத் கெளர், ஜூலன் கோஸ்வாமி, அமிதா சர்மா, கெளஹர் சுல்தானா, எம் திருஷ்காமினி, சுலக்ஷணா நாயக், ஏக்தா பிஸ்ட், மோனா மெஷ்ரம், ரசானாரா பர்வீன், நிரஞ்சனா நாகராஜன், பூனம் ராவுத், ரீமா மல்ஹோத்ரா, கருணா ஜெயின், சுபலக்ஷ்மி சர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.