முகப்பு
விளையாட்டு

4 நாள் போட்டி: தெ.ஆ-வின் ரமேலா சதம்!

கேரளாவின் வயநாட்டில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Updated On : 18 ஆகஸ்ட், 2015 at 5:59 PM
பகிர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா ஏ அணி, முதலில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. அடுத்ததாக இரு 4 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.

கேரளாவின் வயநாட்டில் நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அனைத்து தெ.ஆ. வீரர்களும் பொறுப்புடன் ஆடினார்கள். ஹெண்ட்ரிக்ஸ், டெம்பா ஆகிய வீரர்கள் அரை சதம் அடித்தார்கள். ரமேலா சிறப்பாக ஆடி சதம் எடுத்தார். அவர் 112 ரன்களில் ஆட்டமிழந்தார். 88 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது தெ.ஆ. ஏ அணி.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.