முகப்பு
விளையாட்டு

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: காயம் காரணமாக கர்ண் சர்மா விலகல்!

சர்மாவுக்குப் பதிலாக புதிய வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை...

Updated On : 6 ஜூலை, 2015 at 3:17 PM
பகிர்:

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கர்ண் சர்மா விலகியுள்ளார். இடது கையின் நடு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய பிசிசிஐயின் செய்திக் குறிப்பில், கர்ண் சர்மாவுக்கு இடது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவின் அறிக்கையில், கர்ண் சர்மாவால் இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சர்மாவுக்குப் பதிலாக புதிய வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை. 14 பேர் கொண்ட இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கும் அக்‌ஷர் படேலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளார்கள்.  

Advertisement

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் ஆடவுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டி, ஜூலை 10-ம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.